புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மாவட்டங்களைச் சேர்ந்த 436 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 150 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 36 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு பணிகளை பொன்னமராவதி போலீஸார் மேற்கொண்டனர்.