Regional01

ஈரோட்டிலிருந்து கரூருக்கு மருத்துவர்கள் பேரணி

செய்திப்பிரிவு

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈரோட்டில் இருந்து கரூருக்கு வாகன பேரணி சென்றனர். சங்க தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா பேரணியை தொடங்கி வைத்தார்.

சங்க மாவட்ட துணைச் செயலாளர் மருத்துவர் சரவணன், சங்க துணை தலைவர் விஜயகுமார், பொருளாளர் சுதாகர், செயலாளர் செந்தில்வேல், சுகுமார், அபுல்ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT