Regional01

இரு சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் நகர காவல் துறையினர் புதுப்பேட்டை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருட்டு வாகனத்தில் வந்த திருப்பத்தூர் அடுத்த மடவாளம் அண்ணாநகரைச் சேர்ந்த வல்லரசு (20), சுதாகர் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT