கோவை: கோவை செல்வபுரம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியாற்றியவர் தங்கதுரை(24). இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், சேடப்பட்டி தாலுகாவில் உள்ள பெருங்காமநல்லூர். கடந்த மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி, மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கதுரை, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.