கிருஷ்ணகிரியில அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேரை போலீஸார் கைது செய்தனர். 
Regional02

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மறியல்

செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று தொடங்கியது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வனப்பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத் தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகப்பெருமாள் தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள் கைது

தருமபுரியில் மறியல்

கிருஷ்ணகிரியில் 240 பேர் கைது

ஓய்வூதியர்கள் தர்ணா

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

அதேபோல, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணபவன், பாரி, திருநாவுக்கரசு, மாவட்ட இணைச் செயலாளர்கள் வெங்கடேசா, கெம்பண்ணா, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சந்திரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தண்டபாணி கோரிக்கை விளக்கவுரை யாற்றினார்.

SCROLL FOR NEXT