Regional02

பட்டாசு திரி கடத்திய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே ஜீப்பில் பட்டாசு திரி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்-சாத்தூர் சாலையில் சூலக்கரை போலீஸார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றை சோதனை செய்தபோது அனுமதியின்றி பட்டாசு திரிகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 360 குரோஸ் பட்டாசு திரிகளைப் பறிமுதல் செய்தனர். ஜீப்பில் வந்த ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கர் ராஜ்(55), கட்டனார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி(30) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT