குடிநீர் பிரச்சினை தொடர்பாக கண்களில் கருப்பு துணி கட்டியபடி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அத்தாளநல்லூர் பகுதி மக்கள். (அடுத்த படம்) தேவாரம், திருவாசகத்தை இழிவுபடுத்துவதாக புகார் அளித்த சிவனடியார்கள். (கடைசி படம்) நம்பி திருக்கோயிலில் அன்னதானம் வழங்க அனுமதி கோரிய பக்தர்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண் 
Regional01

குடிநீர் தட்டுப்பாட்டால் அத்தாளநல்லூர் மக்கள் தவிப்பு கருப்பு துணியால் கண்களை கட்டி வந்து ஆட்சியரிடம் முறையீடு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அத்தாளநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்களில் கருப்புதுணி கட்டியபடி வந்து அளித்த மனுவிவரம்: அத்தாளநல்லூர் ஊராட்சியில் 3 குக்கிராமங்கள் உள்ளன.இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் சேதமடைந்தன. அவற்றை சரிசெய்யாததால் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகளும் எரியவில்லை. குடிநீர், தெருவிளக்கு வசதிகளை செய்துதர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னதானம்

இந்து மக்கள் கட்சி

சிவனடியார்கள்

அரசின் இலவச மடிக்கணினி கேட்டு பல்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT