ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நேற்று நடந்தது.
கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம், கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைலாசநாதர் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நேற்று இரவு நடந்தது.
நேற்று அதிகாலை முருகன் - வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கைலாசநாதர் கோயிலில் இருந்து உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
தங்ககவச அலங்காரம்
இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கேஎஸ்.தென்னரசு, தனியரசு ஆகியோர் வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவியும், கடலைக்காய், நெல் தூவியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
மகா தரிசனம்
தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா, பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரோனா கட்டுப்பாடு