ராமநாதபுரத்தில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேருந்து கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது. அருகில் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ. 
Regional02

சாலைப் பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் போக்குவரத்து கண்காட்சி பேருந்து

செய்திப்பிரிவு

போக்குவரத்துத் துறை சார்பில் 32- வது சாலைப் பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வாகன ஓட்டுநர் களுக்கான விழிப்புணர்வுக் கண்காட்சி பேருந்தை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வுக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது கூறும்போது, பைக் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT