Regional03

ராமேசுவரத்தில் இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

ராமேசுவரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(20). இவர் நேற்று ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் பின்புறம் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.

பிரகாஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு ராமேசுவரம் நகர் போலீஸார் அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT