Regional03

ஆவணத்தான் கோட்டையில் 2 கடைகள் தீக்கிரை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் பாண்டிகுடியை சேர்ந்த பி.முருகேசன் மளிகை கடையும், குளமங்கலத்தைச் சேர்ந்த சதாசிவம் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை மின் கசிவால் 2 கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. மேலும் தீ பரவாமல் தீயணைப்பு படையினர் அணைத்தனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT