கள்ளக்குறிச்சியில் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடும் ஆட்சியர் கிரண்குராலா. 
Regional02

கள்ளக்குறிச்சியில் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி வேளாண் விதை சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ், வேளாண்துறை மற்றும் தோட் டக்கலைத் துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க ரூ.5 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்படவுள்ளது.

அதன் பொருட்டு இயந்திர விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் இயந்திர கண்காட்சி தொடங்கப்பட்டது.

SCROLL FOR NEXT