Regional01

கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் கொடிவயல் கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசி. இவர், பயிர் நிவாரணம் பெறுவதற்கு மனு அளிக்கும் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவின்பேரில் வேம்பரசி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT