தி.மலையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி. 
Regional01

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

செய்திப்பிரிவு

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி பெண்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர பேரணி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

வட்டார போக்குவரத்து அலு வலர் அருணாசலம் தலைமை வகித்தார். தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அவர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தை பார்வையிட்டு, சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். வேங்கிக்கால் மற்றும் திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய வீதிகளில் பேரணி சென்றது. இதில் கூடுதல் எஸ்பி வனிதா, உதவி எஸ்பி கிரண்ஸ்ருதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT