திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தேவி பெற்றுக் கொண்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
20.69 லட்சம் வாக்காளர்கள்
அதன்படி, 25 ஆயிரத்து 289 ஆண்கள், 30 ஆயிரத்து 426 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் என மொத்தம் 55 ஆயிரத்து 737 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 13 ஆயிரத்து 774 ஆண்கள், 10 லட்சத்து 55 ஆயிரத்து 220 பெண்கள், 97 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வாக்காளர் களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்கள் உள்ள தொகுதியாக திருவண்ணாமலை உள்ளது. குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வந்தவாசி தனி தொகுதி உள்ளது.
16,696 பேர் நீக்கம்
தி.மலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட் சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங் களில் பொதுமக்கள் பார்வையிட லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.