Regional03

மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் காவல்துறையைபோல வார விடுமுறை அளிக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தேசிய வனக் கொள்கைப்படி, 33 சதவீதம் காடு இருக்க வேண்டும். தமிழகத்தில் 17 சதவீத காடும், பட்டா நிலங்களில் 4 சதவீத காடும்உள்ளது. வனத் துறையின் பாதுகாப்பு பணியில் வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உள்ளனர். காடுகளை பாதுகாப்பதும், மேலாண்மை செய்வதும் இவர்களின் பணி. தற்போது வனக் காப்பாளர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மற்றும் வனக்காவலர்கள் என பலரும் மன உளைச்சலோடு பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

8 மணி நேரம் வேலை

பெண்களுக்கு முன்னுரிமை

வனச்சீருடை பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பணியின்போது இறக்கும் வனக்காப்பாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம்

மாவட்டத்துக்குள் சென்றுவர வனத்துறை ஊழியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வன முகாம்கள், சுற்றுலா முகாம்கள் மற்றும் தணிக்கைகளுக்கு உயர் அலுவலர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT