Regional02

மருத்துவமனையில்குழந்தையை மாற்றியதாக புகார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே சக்கரக் கோட்டையைச் சேர்ந்த மைனர் மனைவி நாகலட்சுமி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது பிரசவத்துக்காக ராம நாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் டிச.14-ல் அனுமதிக்கப்பட்டார்.

டிச.18-ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் வீட்டுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், செவிலியர் ஒருவரது பெயரில் அவருக்கு வந்த கடிதத்தில், அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை மாற்றி பெண் குழந்தையை வைத்ததாக இருந்தது. இது குறித்து புகாரின்பேரில் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT