திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் கொடு முடியாறு அணைப் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 25 மி.மீ. மழை பதிவானது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,584 கனஅடி தண்ணீர் வந்தது. 1,421 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 116.35 அடியாக இருந்தது. 1,107 கனஅடி தண்ணீர் வரும் நிலையில்10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிறஅணைகளின் நீர்மட்டம் விவரம்:
சேர்வலாறு- 145.37 அடி, வடக்கு பச்சையாறு- 30.50 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடு முடியாறு- 26.50 அடி.
சிவகிரியில் 31 மி.மீ. மழை