Regional01

அம்முண்டியில்47 மி.மீ மழை பதிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை பல இடங்களில் மழை பெய்தது.

நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் அம்முண்டியில் 47 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குடியாத்தம் 31, காட்பாடி 32, மேல் ஆலத்தூரில் 24.2, பொன்னையில் 26.8, வேலூரில் 31.8 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 5.2, ஆற்காட்டில் 21, காவேரிப் பாக்கத்தில் 28, சோளிங்கரில் 8.2, வாலாஜாவில் 5.7, அம்மூரில் 31, கலவையில் 5.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT