ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்துக்காக பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500-ஐ திரும்ப ஒப்படைக்க திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள். 
Regional02

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பொங்கல் பரிசுத்தொகையை திரும்ப ஒப்படைக்க வந்த விவசாயிகள்

செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், தொலைபேசி வழியாக நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரிலும் மனு அளித்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் தலைமையிலான விவசாயிகள் கூறும்போது, "ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தால் பலன் பெறும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கிய ரூ.2500-ஐ, ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திரும்ப அளிக்கிறோம். அரசின் சார்பில் அதனை பெற்றுக்கொண்டு, திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியு றுத்தி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பாசனத்துக்கு உட்பட்ட நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. நீர் வரத்து இல்லாததால் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஆனைமலையாறு - நல்லாறுதிட்டம் விவசாயிகளை வாழவைக் கக் கூடியது.

இதுதொடர்பாக ஆட்சியரிடம் பேசிவிட்டு கூறுகிறோம் என்று அலுவலகப் பணியாளர்கள் தெரிவித்தனர்" என்றனர்.

சேவல் சண்டை

கல்குவாரிக்கு எதிர்ப்பு

கல்குவாரிகளால் வெளியேற்றப் படும் புகை, தூசியால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி உள்ளோம்.

கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக வெடிமருந்து வைத்து உடைப்பதனால். ஒலி மாசு பிரச்சினைகள் மற்றும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளன. ஏற்கெனவே இயங்கும் இரண்டு குவாரிகளை தடை செய்து, எங்கள் பகுதியில் எந்தவொரு குவாரி திட்டத்துக்கான அனுமதியையும் வழங்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT