தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள்கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 20 டன் கடத்தல் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் அன்றாட சமையலில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இலங்கையின் ஓராண்டு மஞ்சள் தேவை 7 ஆயிரம்டன் ஆகும். ஆனால், அங்கு 2 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்திசெய்யப்படுவதால், மீதி 5 ஆயிரம்டன் மஞ்சள் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.
கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடை விதித்தது. அவற்றில் மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களும் அடக்கம். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் என இலங்கை அரசு கூறியிருந்தது.
விலை உயர்வு
கடத்தல் அதிகரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் சுமார் 20 டன் கடத்தல் மஞ்சளை காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோக்கள், மினிலாரி, நாட்டுப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2,000 கிலோ பறிமுதல்