சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்றுடன் 26- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பிறகு மாணவர்களிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவ ,மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கூறுகையில், "அரசு கட்டணத்தை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் பெறும் வரை எங்களது போராட்டம் அறவழியில் தொடரும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT