Regional01

அருந்ததியர் சங்கம் ஆலோசனை

செய்திப்பிரிவு

நாமக்கல்லில் தமிழ்நாடு அருந்ததியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்க மாநிலத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பட்டியலின மக்கள் இட ஒதுக்கீடு 18 சதவீதத்தை மூன்றாக பிரித்து, அருந்ததியர் சமூகத்திற்கு 6 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கு மாவட்டங்களில் உள்ள தனித்தொகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.

அருந்ததியர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT