Regional04

2020-ஆம் ஆண்டு கரோனாவால் முடங்கினாலும் சிறப்பாக செயல்பட்ட வேலூர் மாவட்ட காவல் துறை 2.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு

வ.செந்தில்குமார்

2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் முடங்கினாலும், வேலூர் மாவட்ட காவல் துறைக்கு சிறப்பாக அமைந்ததுடன் தேடப் படும் தலைமறைவு குற்றவாளி ஜானியை கைது செய்து பாராட்டு பெற்றனர். அதேபோல், குற்றவழக்குகளிலும் திறம்பட விசாரணை செய்து 190 வழக்கு களில் 2.26 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரித்த நிலையில் 2020-ஆம் ஆண்டுஜனவரி 1-ம் தேதி முதல் புதிய எல்லைகளுடன் மாவட்ட நிர்வாக மும், காவல் துறையும் செயல்படதொடங்கியது. வேலூர் மாவட்டத் தில் கரோனா பொது முடக்கத்தால் சவால்கள் நிறைந்த பணியுடன் வழக்கமான செயல்பாடுகளில் சிறப்பாகவே காவல் துறையினர் செயல்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 34 கொலை வழக்குகள், 40 கொலை முயற்சி வழக்குகள், ஒரு ஆதாய கொலைவழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 190 குற்ற வழக்குகளில் ரூ.3.44 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது. இதில், ரூ.2.26 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது 79 சதவீதமாகும். 38 ரவுடிகள், மணல் கடத்துபவர்கள் 4 பேர், திருட்டு வழக்கில் தொடர் புடைய 30 பேர், சாராய வழக்குகளில் 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 4,725 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.

விபத்து வழக்குகள்

வேலூர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 457 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 10 பொக்லைன், 26 லாரி, 257 மாட்டு வண்டி, 71 டிராக்டர், 122 இதர வாகனங்கள் என மொத்தம் 486 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குட்கா வழக்கு

மதுவிலக்கு வழக்குகள்

ரவுடி ஜானி கைது

அதேபோல், வேப்பங்குப்பம் அருகே விவசாய நிலத்தில் வசித்து வந்த தந்தை, மகள் கொலை வழக்கில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

150 பவுன் நகை மீட்பு

வேலூர் அடுத்துள்ள அரியூர் பகுதியில் பழிக்குப்பழியாக நடந்த 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கும்பலை 4 மணி நேரத்துக்குள் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு மாவட்ட காவல் துறையின் செயல்பாடு பல்வேறு தரப்பினரால் பாராட்டு பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT