திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொலை பேசி வாயிலாக புகார் தெரிவித்தால் தேங்கியுள்ள குப்பைகள், கழிவுநீர் உடனடியாக அகற்றப் படவுள்ளன என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்கள், 208 கிராம ஊராட்சிகளில் பொது மக்களின் பங்களிப்போடு தூய்மை கிராமமாக மாற்றும் வகையில்,அதிகம் தேக்க மடைந்த குப்பைகள், கழிவுநீர் மற்றும் ஒருமுறை மட்டும் பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை ஊராட்சி அமைப்புகள் சார்பில் அகற்றநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற கழிவுப்பொருட்கள்
வெகுமதி வழங்கப்படும்