சேத்துப்பட்டு அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த கண்ணணூர் கிராமம் அம்பேத்கர் நகரில் வசித்தவர் சடையாண்டி மகன் ராஜா(19). மரம் வெட்டும் கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா, ரேணு மற்றும் சிறுவன் வள்ளிக்கண்ணன் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் மரம் வெட்டும் பணிக்காக உலகம்பட்டு கிராமத்துக்கு நேற்று காலை சென்றுள்ளார்.
இதேபோல், சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்பலூர் கிராமத்தில் வசித்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி அலுவலர் நந்திவர்மன்(71) என்பவர் ஆரணி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கங்கைசூடாமணி அண்ணா நகர் பகுதி அருகே சென்றபோது, 2 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் ராஜா மற்றும் நந்திவர்மன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப் பட்டு, சேத்துப்பட்டு அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநர் உயிரிழப்பு
சாலை மறியல்
அவர்களிடம் சேத்துப்பட்டு காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.