Regional01

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் வியாழக்கிழமை தோறும் நடைபெறுகிறது. மதுரை விற்பனைக் குழுச் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 6 விவசாயிகளின் 8,840 தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டன. 4 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.இதில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் விலை ரூ.11-க்கும், குறைந்தபட்சமாக ரூ.10-க்கும், சராசரியாக ரூ 10.58-க்கும் ஏலம் போனது. இதற்குரிய தொகை ரூ.93,600 வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT