Regional02

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு உருளைக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருப்பூரில் மாநகராட்சி 50-வது வார்டு பட்டுகோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் கிளைச் செயலாளர் அ.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் எம்.ரவி (இந்திய கம்யூ.), சேகர் (ஏஐடியுசி), சங்கீதா (மாதர் சங்கம்) உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். கடந்த 15 நாட்களில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 உயர்ந்து இருப்பதாகவும், விலை உயர்வால் சாமானிய மக்கள் விறகு அடுப்பில் சமைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி,சாலையில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT