வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் திருடுபோன 14 இருசக்கர வாகனங்களை போலீஸார் மீட்டுள்ளனர். வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோயின. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எஸ்பி மணி வண்ணன் தனிப்படை அமைத்தார். வள்ளியூர் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். வாகனங்களை திருடியது தொடர்பாக திருக்குறுங்குடியைச் சேர்ந்த அருண்குமார்(23), ஊத்தடியைச் சேர்ந்த மதன்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
மாற்றுத்திறனாளிக்கு உதவி