திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிறிஸ்துமஸ் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனா பரவலால் கடந்த மார்ச் முதல் பொம்மை விற்பனை முடங்கியது. இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:
ரூ.5 கோடிக்கும் அதிகமான பொம்மைகள் விற்பனையாகாமல் உள்ளன. கடந்த ஆண்டுகளில் இதே நாளில் பொம்மைகள் உற்பத்தி செய்ய முடியாத அளவு விற்பனை இருந்தது. இனிமேல் பொம்மைகளை வாங்கி, வெளியூர் கொண்டு சென்று விற்க முடியுமா என்பது சந்தேகமே. விற்பனை ஆகாது என்ற அச்சத்திலேயே வியாபாரிகள் பொம்மைகளை கொள்முதல் செய்யத் தயங்கு கின்றனர். இவ்வாறு அவர் கூறி னார்.