Regional02

முதியவரை கொன்ற அண்ணன், தம்பிக்கு ஆயுள் சிறை

செய்திப்பிரிவு

திருவெண்ணைநல்லூர் அருகேதி .புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (55). இவருக் கும், இவரது சகோதரர் துரைசாமி மகன்கள் குமார் (19), சிவபாலன் (23) ஆகியோருக்கும் வழிபாதை தகராறு இருந்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி25-ம் தேதி குமார், சிவபாலன் ஆகியோர் ராயரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தடியால் தாக்கியதில் உயிரிழந்தார். போலீஸார் குமார், சிவபாலன் ஆகி யோரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எம். செங்கமல செல்வன் தீர்ப்ப ளித்தார். இதில், குமார், சிவபா லன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ. ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறி ஞர் வேலவன் வாதாடினார்.

SCROLL FOR NEXT