விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி கடலில் விழுந்து மாயமான சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரியும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரோனா பரவலைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சிலர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கோமதி அம்மாள்மற்றும் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
சிபிசிஐடி விசாரணை
எனது மகன் மாயமானது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகன்மாயமானதில் மர்மம் உள்ளது.இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகால் வசதி
ஊருக்குள் உள்ள தண்ணீர் வெளியில் செல்லும் வகையில் வடிகாலை அமைக்காமல், வெளியில் உள்ள தண்ணீர் ஊருக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பயன்படும் விதத்தில் மழைநீர் வடிகால் உயரத்தை அதிகப்படுத்தி தண்ணீர் அருகில் உள்ள அமராவதி குளத்துக்கு செல்லும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மணல் திருட்டு
‘மேல திருச்செந்தூர் கிராமம் நடு நாலு மூலைக்கிணறு பகுதியிலும், கீழ நாலு மூலைக்கிணறு பகுதியிலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான குன்றுமேல் சாஸ்தா கோயில் பகுதியிலும், மேல அரசூர் பகுதியிலும் சட்டவிரோதமாக தேரியிலிருந்து செம்மண் திருடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பட்டிருந்தனர்.
சிறப்பு ஸ்கூட்டர்