Regional01

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தனியார் அலோபதி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தனியார் அலோபதி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள். அலோபதி மருத்துவர்களைப் போன்று ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரசு மருத்துவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

மதுரையில் அனைத்து தனியார் மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிகிச்சைகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வழக்கம்போல் பணிக்குச் சென்றனர்.

தேனி

ராமநாதபுரம்

இந்திய மருத்துவ சங்கத்தின் ராமநாதபுரம் கிளை சார்பில் மருத்துவர்கள் ஆலோசனைக் கூட்டம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் டி.அரவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டி.ஆனந்த சொக்கலிங்கம், நிதி செயலாளர் அக்னெலா தெரசா ஜோஸ்பின் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் சின்னத்துரை அப்துல்லா, திருமலைவேலு, ரவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

சிவகங்கை

SCROLL FOR NEXT