மதுரை அருகே சிறுமிக்கு நடந்த திருமணம் தொடர்பாக இளைஞர் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை சிலைமான் அருகில் உள்ள கல்மேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சின்ராஜ்(21) என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு உறுப்பினர் சண்முகத்துக்கு தகவல் கிடைத்தது. அவர் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சின்ராஜ், அவரது தந்தை ஆறுமுகம்(50), தாயார் முத்துமாரி, திருமணத்துக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட மகா லிங்கம், பகவதி ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் காவல் ஆய்வாளர் உமா தேவி வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்.