Regional03

கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதியைப் பயன்படுத்தி, அரசுப் பள்ளியில் பயிலும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளை, தனியார் பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர் களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்.

எனவே, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், 5-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் விண்ணப்பத்தைப் பெற, நாமக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04286-280220 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT