தூத்துக்குடி எம்எல்ஏ பெ.கீதாஜீவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாநகரப் பகுதி களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி அதிகாரி கள் அறிந்தும், அறியாதது போல இருக்கிறார்கள். எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருப்பதால், என்ன வேலை சொன்னாலும் அவர்கள் செய்வதில்லை. குறிப்பாக மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்ப், டேங்கர்லாரி போன்றவற்றை கேட்டால் அனுப்புவதில்லை.
இருப்பினும் எங்களது சொந்த செலவில் 15 இடங்களில் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். இன்னும் 10 மோட்டார் பம்புகள் ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இரவு, பகலாக பணியாற்றி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், எங்களை பணி செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
மழைநீர் வடிகால்கள் திட்டமிட்டு முறையாக கட்டப்படுவதில்லை. இதனால் தண்ணீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் தேங்கி நிற்கிறது. மாநகரின்பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து 5 நாட்கள் ஆகியும்இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பிரதான சாலை பகுதிகளில் மட்டுமே மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகள் சரியாக எரியாததால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அனைத்து பணிகளுக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் உறவினர்களுக்கு தான் டெண்டர் வழங்கப்படுகிறது. இதனால் எந்தப் பணிகளும் சரியாக நடப்பதில்லை. இதை அரசு கவனிக்க வேண்டும் என்றார்.