கீழ்அருங்குணம் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிருக்கு சேமிப்பு கடனை சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார். 
Regional01

பண்ருட்டியில் மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கல்

செய்திப்பிரிவு

கீழ்அருங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கம் சார்பில் சேமிப்பு கடன் வழங்கும் விழா நேற்று பண்ருட்டியில் நடைபெற்றது. இதில் சத்யா பன்னீர்செல்வம் தலைமை தாங்கி 4 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 63 மகளிருக்கு ரூ. 12 லட்சம் சேமிப்பு கடன்களை வழங்கினார்.

அண்ணா கிராமம் ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன், பண்ருட்டி முன்னாள்நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், ராமம் ஒன்றிய அதிமுக செயலாளர் பாபுபுஷ்பராஜ், கீழ்அருங்குணம்கூட்டுறவு சங்க தலைவர் மணி , கூட்டுறவு சங்க செயலாளர் சாம்பசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT