விருதுநகரில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர். 
Regional03

விவசாய நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

விவசாய நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேலுச்சாமி எம்.பி., ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஐ.பெரியசாமி பேசும்போது, விவசாய நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.

விருதுநகர்திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி. (வலது) சிவகங்கை அரண்மனைவாசலில் திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை

தேனி

உத்தமபாளையம் புறவழிச் சாலையில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு தெற்கு மாவட்டப் பெறுப்பாளர் கம்பம் என்.ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், இளைஞர் அணிப் பொறுப்பாளர் பாஸ்கரன், நகர் செயலாளர் இப்ராகீம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT