தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அகல்விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்தினார். 
Regional03

ஜெயலலிதா நினைவு தினம்:அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

SCROLL FOR NEXT