Regional03

புதிய வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மறியல் சேலத்தில் 70 பேர் கைது

செய்திப்பிரிவு

புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் கூடிய தொண்டர்கள், மத்திய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழுக்கமிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்பது பெண்கள் உள்பட 70 பேரை டவுன் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT