மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நீட் தேர்வில் வென்ற மாணவர்கள் கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெற்றனர். அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 250 எம்பிபிஎஸ் இடங்களில் நேற்று வரை 158 பேர் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை டீன் சங்குமணி தலைமையில் நடைபெறுகிறது.