Regional01

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT