தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை யாதவர் தெருவைச் சேர்ந்த மாரி (49), இவரது மகன் செல்வம் (23) மற்றும் உறவினர் சோமு என்ற சண்முகசுந்தரம் (43).இவர்கள் மூவரையும் கொலை வழக்குதொடர்பாக கடந்த 03.11.2020 அன்றுஆழ்வாத்திருநகரி போலீஸார் கைது செய்தனர்.
இதுபோல் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த எபனேசர் பிரசாத் (எ) பிரசாத் (30), விஜயராஜ் மகன் அந்தோணி வினோத் (25), தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (27) மற்றும் தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்த பரமசிவன்மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (37) ஆகிய 4 பேரையும் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸார் கடந்த கடந்த 31.10.2020 அன்று கைது செய்தனர்.
இவர்கள் 7 பேர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பிஜெயக்குமார் பரிந்துரையின் பேரில்மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உள்ளிட்ட 118 பேர் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.