தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டது.
தஞ்சையைச் சேர்ந்த வைர சேகர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் வைக்கப் பட்டுள்ளன இச்சிலைகளுக்கு அரசியல்வாதிகள் போட்டி போட்டு மரியாதை செலுத்துகின்றனர். இத னால் போக்குவரத்து நெரிசலும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்படுகின்றன. எனவே அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் என்.கிருபா கரன், பி.புகழேந்தி விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், தற்போது சிலைகளை கூண்டுக்குள் வைக் கின்றனர். பல அரசியல்வாதிகள் ஆதாயத்துக்காகச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர். அப் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், என்றனர்.
பின்னர் மனு தொடர்பாக தமிழக அரசு டிச. 14-ல் பதிலளிக்க உத்தரவிட்டனர்.