Regional01

இன்று முதல் ஏற்காடு சூழல் பூங்கா ஆனைவாரி முட்டல் அருவியில் பயணிகளுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக சேலம் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த சூழல் சுற்றுலா தலங்கள் இன்று (2-ம் தேதி) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ஏற்காடு வனச்சரகத்தில் சேர்வராயன் மலையில் உள்ள கரடியூர் காட்சிமுனைப் பகுதி, ஏற்காடு சூழல் பூங்கா, ஆத்தூர் வனச்சரகத்தில் ஆனைவாரி முட்டல் அருவி ஆகியவற்றில் இன்று முதல் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு வழிமுறைகளுடன் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

SCROLL FOR NEXT