`புரெவி’ புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தூத்துக்குடி வந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தலா 40 பேர் வந்துள்ளனர். இவர்கள்மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுவர்.
அவசர ஆலோசனை
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார்ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அனைத்து துறைஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
படகுகள் கரை திரும்பின
தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்கள், உணவு, குடிநீர், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியை சேர்ந்த 72 படகுகள் கடலுக்கு சென்ற நிலையில் 64 படகுகள் ஏற்கெனவே கரை திரும்பிவிட்டன. 8 படகுகள் திருச்செந்தூரை தாண்டி தூத்துக்குடி அருகே வந்துவிட்டன. இரவுக்குள் அவை கரைக்கு வந்துவிடும் என்றார்.
63 நிவாரண முகாம்கள்
மாவட்டத்தில் உள்ள 637 குளங்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். உடைப்பு ஏற்பட்டால் உடனே சரி செய்ய 30 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்ய இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மீட்புக் குழுவினர்