பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வலியுறுத்தி ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர்கள் ச.பழனியப்பன், பி.தனசேகரன், கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், வருமானவரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் கரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பேருந்து நிலையம் எதிரே திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதுபோல் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். இதன்படி மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
ஈரோடு
தருமபுரியில் போராட்டம்
இதே போல் பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று மழையால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஓசூரில் ஆர்ப்பாட்டம்