புயல் மழையை எதிர்கொள்ளும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்களில், 50 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
‘நிவர்’ புயல் காரணமாக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கான ஆரஞ்ச் அலர்ட் பட்டியலில் ஈரோடு மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் வகையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மழை வெள்ளத்தின்போது, தங்குவதற்காக ஏழு மாநகராட்சி பள்ளிகள், இரு திருமணமண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற இயந்திரங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் செல்வதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், அதன் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ரப்பர் படகுகள்
கீரிப்பள்ளம் ஓடை
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோபி கிரீப்பள்ளம் ஓடையை ரூ.11.5 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்களில் 50 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
மதியம் வரை மழையில்லை
பொதுவிடுமுறை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நகர சாலைகளில் வாகன இயக்கம் குறைவாகவே இருந்தது.