Regional01

கடலோர கிராமங்களில் வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் வடக்குமண்டல ஐஜி நாகராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிதம்பரம்அருகே உள்ள பெராம்பட்டு,திட்டுக்காட்டூர், மேலகுண்டலா பாடி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர், கடலூர் அருகே உள்ள தியாகவல்லி, நொச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு செய்தார். இக்கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட புயல்,வெள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

கடலூர் எஸ்பி அபிநவ், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT