மானாமதுரையில் விற்பனைக்குத் தயாராக உள்ள விநாயகர், முருகன் சிலையுடன் கூடிய அகல் விளக்குகள். 
Regional02

விநாயகர், முருகன் சிலையுடன் மானாமதுரையில் அகல் விளக்குகள் தயாரிப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் திருக்கார்த்திகைக்காக இந்த ஆண்டு விநாயகர், முருகன் சிலைகளுடன் கூடிய அகல் விளக்குகள் தயாராகி வருகின்றன.

மண்பாண்டத் தொழிலுக்கு புகழ்பெற்ற ஊர் மானாமதுரை. இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு சீசனுக்கு ஏற்ப அக்னிச் சட்டிகள், மண் அடுப்புகள், கூஜாக்கள், குருவிக்கூடுகள், கலைநயமிக்க அலங்காரப் பொருட்களை தயாரிக்கின்றனர்.

இந்த ஆண்டு திருக்கார்த் திகைக்காக சர விளக்குகள், அணையா விளக்குகள், துளசி மாடம், கணினி விளக்கு, ஐந்து முக குருவாயூர் விளக்கு, நட்டு விளக்கு, அகல் விளக்குகள், தேங் காய் முக விளக்குகள் விநாயகர், முருகன் சிலைகளுடன் கூடிய அகல் விளக்குகள் தயாரிக்கப் பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

சிவகங்கை மாவட்டம் மட்டு மின்றி, தமிழகம் முழுவதும் பல் வேறு மாவட்டங்களில் இருந்து விளக்குகளை வாங்குவதற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

கரோனாவால் முடங்கியிருந்த மண்பாண்டத் தொழில் தற்போது மீண்டும் மும்முரம் அடையத் தொடங்கி உள்ளது.

SCROLL FOR NEXT